சிரியா மக்களின் அவலங்களும் பொருத்தமில்லாத தீர்வுகளும்!!!
சிரிய மக்களின் அவலமும் பொருத்தமில்லா தீர்வுகளும்!!! சிரியாவின் அவலம் கண்டு உலக முஸ்லிம் உம்மத் கவலையோடு இந்த அநீதிக்கு ஒரு முடிவு வராதா மீண்டும் சிரியா சுபீட்சம் பெற தீர்வு ஏதும் உண்டா என்று காணப்படுகையில் ஒரு சில உலமாக்களால் தீர்வுகளாக சிரிய மக்களை பொறுமைகாக்க சொல்வதும், அம்மக்களுக்காக நன்கொடை வழங்குமாறு பணிப்பதும், நம்மால் முடிந்தது துஆ மட்டும்தான் என்று கூறுவதையும் அவதாணிக்க முடிகின்றது!!! அடிப்படையில் மேலுள்ள தீர்வுகள் சிரியா அரசியல் பிரச்சினையின் விளைவான யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாம் கூறும் தீர்வுகளா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை!!! துஆ கேட்டல், நிதியுதவி வழங்குதல் போன்ற விடயங்கள் சிரியா யுத்தத்ததை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாம் உரைக்கும் தீர்வினை செயற்படுத்தும் முயற்சியோடு தொடர வேண்டிய நல்லமல்களே தவிர இஸ்லாம் கூறும் உண்மைத் தீர்வை புறக்கணித்து தீர்வாகக் காட்டப்பட வேண்டிய அம்சங்களல்ல. நிஜத்தீர்வை நோக்கி உம்மத்தை நகரவிடாமல் செய்வது அல்லலுரும் சகோதர முஸ்லிம்கலுக்கு செய்கின்ற மிகப்பெரும் துரோகமும், பாவமும் ஆகும்!!! சிரியா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர