சமூக தீமைகளும் தீர்வும்...
இன்று சமூகத்தில் பெரும்பாவங்கள் மலிந்துள்ளது. பொடியன் சமாச்சாரமுதல் அரசியல்வாதிகளது சல்லாபங்கள்வரை. இவற்றிற்கு எல்லாம் இந்த சம்மேளனம் தீர்வுகொடுக்கும் அதிகாரம் பெற்றதா?
இன்று செவன டிகட் முதல் பாடசாலையில் ஆண்பெண்கலப்பு வரை அனாச்சாரங்கள் தொடர்கிறது. வட்டிக்கடை முதல் குடுவியாபாரம் வரை சமூகம் சீரழிகிறது. இவையாவற்றையும் தடுத்து நிறுத்த இந்த சம்மேளனத்திற்கு சக்தியுள்ளதா?
பகுதியாக சிலவிடயங்களில் அறைகுறை தீர்வுகளை மக்களிடம் சொல்லும் நிலை ஒருவகையான அநீதியே! இஸ்லாம் பற்றி சிந்திப்பவர்கள் அதனது முழுமையான அதிகாரம் பற்றியும் சிந்திக்க வேண்டும். அது இல்லாதவிடத்து நமது சமூக முன்னெடுப்புகள் பக்கச்சார்பாகவும் அநீதிக்கு வழிகோலுவதாகவுமே அமையும்.
பாவங்களுக்கு தண்டனை கொடுப்பது பற்றி சிந்திக்கும் சமூகம் பாவங்கள் நடைபெற காரணமான இன்றைய குப்ரிய வாழ்வொழுங்கும் அதனை அமுலாக்கும் அரசுபற்றியும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது!
இஸ்லாம் அமுலாக்கப்படாத நிலையில் சமூகத்தீமைகள் மலிந்தே காணப்படும். அது தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை தொடரவே செய்யும்.
- Ahamed Maryam Mohideen
Comments
Post a Comment