Posts

Showing posts from February, 2018

கிலாபா தேவை இக்கணம் - சிரியா...

Image
மார்ச் 3 1924:- மனித இனத்தின் ஓளி வெளிச்சம் துரோகிகளால் அனைக்கப்பட்டு இருளில் மூழ்கடிக்கப்பட்ட தினம்!!! மீண்டும் மனிதகுலம் ஜாஹிலியத் என்னும் புதைக்குழிக்குள் தள்ளப்பட்ட தினம்!!! உம்மத் பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டு சகோதரத்துவம் அழிக்கப்பட்ட தினம்!!! மக்களாட்சி, மதச்சார்பின்மை, முதலாளித்த கேடுகள் தலையெடுத்த தினம்!!! உலக மக்கள் மனதில் இனவெறி, மொழிவெறி, தேசியவாதவெறி விதைக்கப்பட்ட தினம்!!! இதோ இப்போது உணர்கிறோம் கிலாபாவின் அதிமுக்கிய தேவையை சிரியா சிதைக்கப்படும் இந்த வேலையில்!!! இழந்ததை பெற முயற்ச்சிப்போம் மாறாக திணிக்கப்பட்ட குப்ரு வாழ்வியலை ஏற்று கொள்வது என்பது திருமணம் செய்ய முடியவில்லை என்று விபச்சாரம் செய்வதை போன்றது!!!

யார் தீவிரவாதி???

Image
உலக வரலாறைப் புரட்டிப் பார்த்தால் மக்களைக் கொன்று குவித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஹிட்லர். 60 லட்சம் மக்களை நேரடியாகவும், 3 கோடி மக்களை மறைமுகமாகவும் கொன்று குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருப்பவர் அங்கிள் ஜோ என்றழைக்கப்படுகிற ஜோசப் ஸ்டாலின். 20 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளார். அதில் 14.5 மில்லியன் மக்களை பசி, பட்டினி போட்டு கொன்றுள்ளார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் மா.சே. துங். 14 முதல் 20 மில்லியன் மக்களைக் கொன்றுள்ளார். நான்காவதாக முசோலினி. 4 லட்சம் மக்களைக் கொன்றுள்ளார். அதில் 40,000 பேரை தூக்கில் போட்டு கொன்றுள்ளார். ஐந்தாவதாக பிரஞ்சுப் புரட்சியின் போது மேக்ஸிமிலன் ரோபியர். 2 லட்சம் மக்களைக் கொன்றுள்ளார். அசோகர் கூட கலிங்கப் போரில் 1 லட்சம் மக்களைக் கொன்றுள்ளார். இவர்கள் யாவரையும் அவரவர் சார்ந்த மதங்களோடு யாரும் குறிப்பிடுவதில்லை. ஆனால் முஸ்லிம் என்றால் மட்டும் இஸ்லாம் அங்கே முண்டியடித்துக்கொண்டு வந்துவிடும். இஸ்லாமிய தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி என்று வாய்க்கு வாய் வலம் வரும். - Received 

ஷாம் பற்றி இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள்!!

Image
' ஷாமின்' நிகழ்வுகள் தொடர்பிலும் , அதன் மக்கள் தொடர்பிலும் இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள். அல் குர் ஆன் பேசுகிறது. 1. " (நாம் ) சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் . அது அவரை அவர் ஏவுகின்ற பிரகாரம் ,நாம் அருள் புரிந்த பூமியை நோக்கி எடுத்துச் செல்லும் ,மேலும் நாம் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக உள்ளோம் " (அல் குர் ஆன் ) இந்த வஹியுடைய வார்த்தைகள் சுலைமான் (அலைஹிஸ்ஸலாம் ) அவரகளின் ஆட்சிப் பிரதேசமாகிய ஷாம் எனும் பகுதியை பற்றியே குறிப்பிடுகின்றது . 2. மேலும் அவர்கள் அவர் விடயத்தில் சூழ்ச்சி செய்யவே நாடினார்கள் .எனவே நாம் அந்த சூழ்ச்சிகளில் இருந்து அவரை காப்பாற்றி அவர்களை இழிவடைந்தவர் களாக்கினோம் . மேலும் அகிலத்தாருக்கு நாம் அருளாகக் கொடுத்த பூமிக்கு அனுப்பப் பட்ட லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் காப்பாற்றினோம். (அல் குர் ஆன் ) இங்கு இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களை பாதுகாத்ததாக குறிப்பிடும் அல்லாஹ் ,லூத் (அலைஹிஸ்ஸலாம் ) அவர்களையும் அரபு தீபகற்பம் மற்றும் ஈராக் பகுதிகளில் இருந்து ஷாம் பிரதேசத்தின் பால் அனுப்பப் பட்டு அவர்களை

துஆ மட்டும் போதாது!!!

Image
துஆ மட்டும் போதாது இஸ்லாமிய சொந்தங்களே... துஆ மிகப்பெரிய ஆயுதம்தான் ஆனால் துஆ செய்வதோடு உம்மத்தின் கடமை முடிந்துவிடுவதல்ல! தீர்க்கமான பாதுகாப்பை நிறுவ முயற்சிக்கவேண்டும்- நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும்!! தீர்வு... தீர்வை அல்லாஹ்(சுபு) இனி நபிமார்களை அனுப்பி வழங்கப்போவதில்லை.... ஏற்கனவே முஹம்மது நபி -ஸல் அவர்களை அனுப்பி தீர்வையும் வழங்கிவிட்டான்! அந்த தீர்வுதான் இன்று நமக்கு மீதமிருக்கக்கூடிய ஒரே வழி இஸ்லாமிய ஆட்சி எனும் 'கிலாஃபத் அரசு' நபி-ஸல் அவர்கள் கூறினார்கள்: "இமாம் ஒரு கேடயம் ஆவார், அவருக்கு பின்னால் நின்று நீங்கள் போர்புரியவேண்டும், அவரைக்கொண்டே நீங்கள் பாதுகாப்பு பெறுவீர்கள்." -அபூஹுரைரா-ரலி நூல் - முஸ்லிம். மேலும் "நுபுவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் குலஃபாயே ராஷீதீன் ஏற்படும்...." -ஹுதைஃபா-ரலி நூல் - முஸ்னத் அஹ்மத். ஒரே தீர்வு கிலாஃபா! இதை நபிவழியில் ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக்கடமையாகும். இதை முயற்சி செய்து  பிறகு துஆ செய்வோம்! வெறுமனே துஆ மட்டும் போதாது!! - Received

சிரியா பிரச்சனை ஒரு ஆய்வு நோக்கு!!!

Image
சிரியா பிரச்சனை ஒரு ஆய்வு நோக்கு... இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் ஏற்பட்ட மிகவும் சிக்கலான அதேநேரம் மிகவும் கோரமான யுத்தம் நடக்கும் சிரியா மீண்டும் தலைப்பு செய்திகளில் வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. கிழக்கு ஃகூத்தா (East Ghouta) வில் மீண்டும் சிரியா இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட  அல்லது ஆரம்பிக்கப்படப்போகும் Operation Damascus Steal எனும் இராணுவ நடவடிக்கை காரணமான மனித பேரவலங்கள் உலகத்தின் கவனத்தை மீண்டுமொரு முறை  சிரியா பக்கம் திருப்பியிருக்கிறது. ▶️கிழக்கு ஃகூத்தாவின் அமைவிடம் கிழக்கு ஃகூத்தா என்பது ஒரு தனி நகரமல்ல. கொழும்புக்கு கம்பஹா மாவட்டம் போல சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் புறநகர் பகுதியின் பெயர். இதற்குள் பத்து நகரங்கள் வரை உள்ளங்குகின்றது, எனினும் Douma எனப்படும் நகரமே பெரிய நகராகும். டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் கூட ஃகூத்தாவுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. கிழக்கு ஃகூத்தா சிரியா புரட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் கழிந்த பின்னர் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. அன்றிலிருந்து கடந்த ஆறு வருடங்களாக சிரியா இராணு

சிரியாவின் Ghouta பிரதேசம் பற்றிய சில குறிப்புகள்!!!

Image
சிரியாவின் Ghouta பிரதேசம் பற்றிய சில குறிப்புகள். சிரியாவின் டமாஸ்கஸுக்கு அருகிலிருக்கும் இந்நகர் இயற்கை வனப்பு மற்றும் விவசாய உற்பத்தியை கொண்ட பகுதியாகும்.பாரடா ஆறு மற்றும் சூழவுள்ள மலைகள். பழங்கள் காய் கனிகளின் உற்பத்தியென இந்த கெளடா பகுதி சிறப்பம்சங்கள் பலவுள்ள பகுதியாகும்.  அத்துடன் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இந்த கெளடா பகுதி காணப்படுகிறது. தற்போது ரஷ்ய ஆசாத் கூட்டுப்படை முற்றுகையிட்டு தாக்கிவரும் இந்த  கெளடா என்ற பகுதி இதற்கு முன்னரும் கொடூரமாக தாக்கப்பட்டது நாம் அறிந்ததே.  தற்போது மூன்று நாளைக்குள் சிவிலியன்களின் 500 க் கணக்கான கொடூர மரணங்களை சந்தித்த இந்த பகுதி முன்பொருமுறை ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குழந்தைகள் உட்பட மிக பலிகொண்ட தாக்குதலை சந்தித்தது. அது ஒரு இரசாயன ஏவுகனை தாக்குதலாகும். கௌடா மீது இந்த  இரசாயன ஆயுத தாக்குதல் நடந்தது 2013 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அதி காலையிலாகும். சிரியாவின் டமாஸ்கஸுக்கு அருகிலிருக்கும் இந்நகர் மீது தன் மீதான எதிர்ப்பைக்  கட்டுப்படுத்த பசர் அல் அசாதின் இராணுவம்  செரின் இரசாய

உஸ்மானிய படைவீரன்!!!

Image
1913ம் ஆண்டு... பால்கன் யுத்தத்தின் இடையில் பல்கேரிய வீரர்கள் கைதியான உஸ்மானிய படைவீரருக்கு மரணதண்டனை வழங்க தூக்குக் கயிரை ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவரோ இறுதியாக தொழுவதற்கு உளூ செய்கிறார்... #இஸ்லாம் #வரலாறு Musthafa Qasimi

தாருல் குப்ர்...

காஃபிர்கள் குஃப்ரைக் கொண்டு ஆட்சி செய்யும் தாருல் குஃப்ரில் ஒரு முஃமின் எப்படி வாழ வேண்டும் எனக் கேட்டால் பலர் அபிசீனிய வாழ்வை மேற்கோள் காட்டுவர். இன்னும் சிலர் யூஸுஃப் (அலை) அவர்களை மேற்கோள் காட்டுவர். அபிசீனிய்யாவை மேற்கோள் காட்டுவோர் do nothing , அல்லது pragmatic பண்புகளை வெளிப்படுத்த முற்படுகிறார்கள். யூஸுஃப் (அலை) அவர்களை மேற்கோள் காட்டுவோர்  "if you can't beat them join them" , எனும் விதியை பின்பற்ற எத்தனிக்கின்றனர். உண்மையில் மேற்கண்ட இரு முன்மாதிரிகளும் எவ்வகையிலும் முடங்குவதையோ , குஃப்ரோடு கூட்டணி கொள்ளவோ பரிந்துரை செய்யவில்லை. தாருல் குஃப்ரை தாருல் இஸ்லாமாக மாற்றும் கடமை இந்த உம்மத் மீது சுமத்தப்பட்டே உள்ளது. எனவே நாம்  அரசியலில் பங்களிப்பு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் எங்கெங்கும் வியாபித்துள்ள குஃப்ர் அரசியல்  பாலிசிக்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இயங்க இயலாது. அதே நேரம் ஆதிக்கத்தில் இருக்கும் சக்தியோடு ஐக்கியமாகி குஃப்ர் விதி முறைகளை அப்பிக் கொண்டு களப்பணி ஆற்ற முயலக் கூடாது. நபி யூஸுஃப்(ஆலை) அவர்கள் எவ்விடத்திலும் குஃப்ரை நிலை நாட்டிடும் நிர்வாகத்தை செய

ஷாமிற்கு நற்செய்தி உண்டு!!!

Image
ஷாமிற்கு நற்செய்தி உண்டு..! இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் ஸல் அவர்களின் வார்த்தை ஒரு காலும் இது பொய்யாகாது..! ஷாமிற்க்கு நிச்சயமாக #துன்பத்திற்கு பிறகு ஓர் #இன்பம் உண்டு..! இப்போது வேண்டுமானல் #ஷாம் #அலக்கழிக்கபடலாம்..! ஆனால்..! #ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக..! இன்ஷா அல்லாஹ்..! #ஷாம்_தேசம்_என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்... #ஷாமின்_சிறப்பை_அறிவோம்..! முஹம்மது ஸல் அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று #ஷாமும்_தான்..! அல்லாஹுவின் #பர்க்கத் பொருந்திய இடமும் ஷாம் தான்..! நமது மூன்றாவது புனித ஸ்தலம் #மஸ்ஜிதுல்_அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..! நமது மூன்றாவது #புனித_ஊரும் ஷாம் தான்..! அதிகமான #நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..! உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் #நெற்றி_சுஜூத் செய்ததும்  ஷாமில் தான்..! #வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..! #வானவர்கள் தங்கள் #இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..! முஹம்மது

சிரியாவின் விவகாரம் சில புரிதல்கள்!!!

Image
சிரியாவின் விவகாரம் சில புரிதல்கள்... சுயலாபம், ஆதிக்க வெறி, பிராந்திய கட்டுப்பாடு போன்ற பல்வேறு இலக்குகளை கொண்ட அரசுகளும் அதற்கு சார்பானதும் எதிரானதுமான இயக்கங்களும் வெவ்வேறு கோணங்களில் இணைந்தும் பிரிந்தும் நடத்தும் யுத்த சதுரங்கமே தற்போதைய சிரியாவாகும்.  ஆனால் இதற்கும் அப்பால் சத்தியத்திற்கான ஒரு போராட்டமும் எதிர்பார்ப்பும் அங்கு இல்லையென்று யாராவது கூறினால் அவர்கள் சிரியா பற்றிய வஹியின் முன்னறிவிப்புகளை பற்றியும் இஸ்லாமிய கோட்பாட்டு அடிப்படையில் அப்பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் பற்றியும் தெரியாத ஒருவராக அல்லது தெரிந்தும் மறுக்கும் ஒருவராகவே இருக்கமுடியும். உண்மையில் ஜெஸ்மின் புரட்சியின் ஓர் அங்கமாகவே பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புகள் சிரியாவில் ஆரம்பித்தது. அதாவது மக்கள் எதிர்பார்ப்பு ஒரு அதிகார மாற்றத்துக்கான தேடலாகவே தொடங்கியது. அதுவரை முதலாளித்துவ மேற்குலகுக்கோ அல்லது அவர்களுக்கு சேவகம் புரியும் மத்திய கிழக்கு மற்றும் பால்க்கன் நாடுகளுக்கோ ஒரு சிக்கலாக இருக்கவில்லை. ஆனால் ஆட்சி மாற்றம் பற்றிய மக்களின் கோரிக்கை ஷரீஆ வழியில் ஆட்சி மற்ற

புனித பூமி சிரியா!!!

ஈமானும்,கல்வியும் அடைக்கலமாகும் சிரியா ..! இன்று... பிஞ்சு மலர்கள் பற்றி எரியும் சிரியா ..! பஞ்சு மெத்தையில் படுத்துறங்க வேண்டிய பூமலர்கள் ... நெஞ்சக் கூட்டில் இடி விழுந்து இறக்கின்ற சிரியா ..! புன்னகை பூக்கள் அடக்கமாகும் சிரியா ..! ஈனப்பிறவிகளால் பற்றி எரிகிறதே இது  சரியா ..! உம்மத் எனும் ஓருடலின் உறுப்புக்கள் சிதைக்கப்பட உணர்வின்றி வாழ்வது சரியா..? உம் உணர்வை மழுங்கடித்தது உலக சுகம் எனும் திரையா ..? எம் உம்மத் இன்னும் வஹ்னில் வாழ்வது சரியா ..? எல்லாவற்றிற்கும் நீதி கிடைக்க மீண்டு வர வேண்டும் - மீண்டும் வர வேண்டும் எங்கள் இறைவனின் ஷரீஆ ..! அப்போது உலகை பார்த்து புன்னகைக்கும் இன்றைய சிரியா ..! - இஸ்லாமிய மாணவன் சையது முர்துஸா.

எதிரிகளிடம் ஒரு ஒற்றுமை தெரிவதை கவனிக்கின்றோமா நாம்?

எதிரிகளிடம் ஒரு ஒற்றுமை தெரிவதை கவனிக்கின்றோமா நாம் ? எம்மிலுள்ள அதீத இஸ்லாமிய சிந்தனை பெற்றுள்ள , அல்லது உலகின் துருப்புப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை தனித்திட்டப்படி கொல்கின்றார்கள். அதன் வாயிலாக ஒரு இஸ்லாமிய மைய்ய அரசு உருவாவதை நேரடியாக தடுக்கின்றார்கள். அவ்வாறு இயலாத  நாடு்களில் குறைந்த பட்சமாக நல்லோரை கைது செய்து முடக்குகிறார்கள். அரசியல் ஞானமே இல்லாதோரை முன்மாதிரி முஸ்லிம் என்கிற பெயரைச் சூட்டி ஊருக்குள் அவர்களின் கோண(ல் தன)த்தை  மார்கெட்டிங் செய்கிறார்கள். புத்தி ஜீவிகளை குருட்டாம் போக்கில் எதிர்க்கும் ஒவ்வொரு முட்டாளுக்கும் களம் அமைத்துத்தந்து எதிர்ப்பை  வலுப்படுத்தி குளிர் காய்கிறார்கள். செக்யூலரிச முதலாளித்துவத்துக்கு  வழி விடாத மன்னரிசத்தையோ , கம்யூனிச அரசையோ சகிக்க முடியாத மேற்குலகு , அதே அரசுகள் இஸ்லாத்தை எதிர்க்கும் பட்சத்தில் பொருந்தாக் கூட்டணி அமைத்து லாவணி பாட தவறுவதில்லை. பிராந்திய இஸ்லாமிய எதிரிகளுக்கு சர்வதேச தரத்து உதவிகளை தந்து உக்கிரமாக மோதும் சந்தர்ப்பதை வலிந்து உண்டாக்குகிறார்கள். பொதுபல சேனா , ஆர்.எஸ்.எஸ் , புத்த மத பயங்கரவாதிகள் , வெள்ளையின வெறியர்க

துருக்கி நினைத்தால் சிரிய யுத்தத்தை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு வரமுடியும்!!!

Image
துருக்கி நினைத்தால் சிரிய யுத்தத்தை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு வரமுடியும்.  துருக்கி ஒரு மில்லியனுக்கு அதிகமான இராணுவத்தை திரட்டக்கூடிய தேசமாகும். டமஸ்கஸ்,அலெப்போ இரண்டையுமே கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தால் சிரிய யுத்தம் முடியும். துருக்கி தனது எல்லையை சிரியாவுடன் பகிர்வதால் இராணுவ வளத்தை மிக இலகுவில் வழங்கமுடியும். சொந்தமாக பாதுகாப்பு துறை விருத்தியை மேற்கொள்ள முடியாத  நாடாக சிரியா காணப்படுகின்றபோது, பாரிய கவச  வாகனங்களையும், இராணுவ கேடையங்களையும் உற்பத்தி செய்யும் நாடாக துருக்கி உள்ளது. சிரிய இராணுவ தளபாடங்கள் அழித்தொழிக்கப்பட்டால், மீளவும் அவற்றை பெறுவதில் சிரியா தள்ளாடும். ஏனென்றால் அது வெளிநாட்டு உதவியை வேண்டி நிற்கும் ஒரு நாடு. யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போதே இராணுவ கேடயங்களை உருவாக்குமளவுக்கு ஆயுதத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் வல்லமை துருக்கிக்கு உண்டு. துருக்கி  தரைப்படை மற்றும் ஆகாய வழி தாக்குதலை தொடர்ந்தால் சிரியாவின் "SAM Battery" அதாவது விமானங்களையும் , ஏவுகணைகளையும் வீழ்த்தக்கூடிய நிலத்தில் அமையப்பெற்றிருக்கும் கட்டமை

பிக்ஹுல் அகல்லியாத்... தொடர் - 6

சிறுபான்மையினருக்கான ஃபிக்ஹ் இஸ்லாத்தைச் சீரழிப்பதற்கான புதிய ஃபிக்ஹ் தொடர் 06 யூசுப் (அலை) அவர்களின் வரலாறும், அவர்கள் எகிப்து நாட்டை நிர்வகிக்கும் ஆட்சியில் பங்குபற்றினார்கள் என்ற வாதமும். அல்குர்ஆன் நபி யூசுஃப்(அலை) அவர்களின் வரலாறை இவ்வாறு கூறுகின்றது: “யூசுஃப், நாட்டின் கருவூலங்களுக்கு என்னை பொறுப்பாளராக்குங்கள். நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன் என்று கூறினார். மேலும் இவ்வாறு நாம் யூசுப்பிற்கு அந்த அதிகாரத்தை வழங்கினோம். அவர் அங்கே தாம் விரும்பும் எந்த இடத்திலும் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்.” (12:55-56) எகிப்து அரசரின் இஸ்லாம் அல்லாத ஓர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கு நபி யூசுஃப்(அலை) அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நிரூபிப்பதற்கான முயற்சியில் இந்த திருவசனம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இன்றைய முஸ்லிம்களும் இதே போன்று அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சிலர் வாதிக்கின்றனர். இதற்கோர் ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர்: “மன்னனின் தீனின்படி (எகிப்து நாட்டு அரச சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்பு