Posts

Showing posts from January, 2020

புரட்சித் தலைவி அம்மா. அமீரா சிக்கந்தர் பேகம்...

<><><><><><><><><><><><><><> ஆலம்கீர் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்பட்ட மாமன்னர் அவுரங்க ஜேப் (1618 -  1707) அவர்கள் இறந்த பின் அரச குடும்பத்தில் குழப்பங்கள் பரவின. அதிகாரப் போட்டியால் அரச குடும்பம் வலிமையிழந்தது. அவுரங்கஜேபின் விரிந்த ஆளுகைக்குட்பட்ட (நிலப்பரப்பின் மாகாண ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோர் தத்தமது பகுதிகளை தனி அரசாக அறிவித்துக் கொண்டனர். தோஸ்த் முஹம்மது கான் என்ற ராணுவத் தளபதி போபால் பகுதியை தன்னுடைய தனி அரசாக அறிவித்து கொண்டார். கி.பி 1722 (ஹிஜ்ரி 1145) ஆம் ஆண்டில் அவர் தன் மனைவி பத்ஹ் பீபீ பெயரால் “பத்ஹேகர் என்றொரு கோட்டையைக் கட்டினார். பின்னர் ஹிஜ்ரி 1153-ல் அவர் மரணமடைந்தார். இவரைத் தொடர்ந்து போபால் நாட்டில் பனிரெண்டு அரசர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். கி.பி 1949ஆம் ஆண்டு போபால் நாடு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலம் வரை. இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அந்தப் பனிரெண்டு அரசர்களில் நால்வர் பெண்கள். அதாவது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 33% சதவீத இடஒதுக்க

மத்திய கிழக்கின் யதார்த்த நிலை இதுதான்!

மத்திய கிழக்கின் யதார்த்த நிலை இதுதான்! நவ சிலுவைப் போரை வழிநடத்தும் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவனான விளாட்மிர் புடின் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது சிரிய பயணத்தின் போது டமாஸ்கஸில் உள்ள சலாஹுதீன் அல்-அய்யூபியின்(ரஹ்) கல்லறைக்கு சென்றுள்ளான். இது 100 ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லறைக்குச் சென்ற பிரான்ஸ் தளபதி ஒருவனின் செயலை நினைவூட்டுகிறது. அவன் "ஓ சலாஹுதீனே! நாம் மீண்டும் வந்துவிட்டோம்! நாங்கள் சிலுவைப்போர் சந்ததியினர்! உங்கள் சந்ததியினர் எங்கே?" என்று கர்ஜித்தான். முஸ்லிம் உலகை கட்டுப்படுத்துவதிலும் சுரண்டுவதிலும் அழிப்பதிலும் அமெரிக்க ரஷ்ய அணிகள் தமக்குள் முரண்பட்ட நிலையிலும் ஒன்று படுகின்றனர். இவர்களுக்கு உதவியாக.... அப்துல்லாஹ் இப்னு சபா முஸ்தபா கமால் அத்தாதுர்க் அப்துல் அசீஸ் பின் சவுத் என்ற மூவரின் சந்ததிகளும் அவர்கள் சார்ந்த இனக்குழுக்களும் இந்த நவீன சிலுவை போரில் துணைபோகின்றனர். இவர்களில் ஒரு தரப்பு இஸ்லாமிய பெயர் தாங்கி குடியரசு கோட்பாட்டையும்.... இன்னொரு தரப்பு இஸ்லாமிய பெயர் தாங்கி மன்னரிசத்தையும்.... அடுத்த தரப்பு முற்றிலும் மேற்குலகு சார்ந்த செக்கியூலரிசத்த

யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்கள்...

யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலாவதாக நிகழவிருப்பது... 1) எனது மரணம் (நபி ஸல்) 2) பைத்துல் மக்திஸை (முஸ்லிம்கள்) கைப்பற்றுவது. 3) உங்களிலும், உங்கள் சந்ததிகளிலும் (ஏராளமானோரை) உயிர்த்தியாகிகளாக மரணிக்கச் செய்யும் ஒரு (மாபெரும்) கொள்ளை நோய். 4) அதன் பிறகு ஒரு மனிதருக்கு நூறு தீனார் (தங்கக் காசுகள்) கொடுக்கப்பட்டால், அதையே அவர் அற்பமாகக் கருதும் அளவுக்கு உங்கள் மத்தியில் செல்வம் பெருகி விடும். 5) அதையடுத்து ஒரு முஸ்லிமின் வீட்டைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு உங்களை இன்னல்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கும். 6)அதையடுத்து உங்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையில் ஒரு சமாதான உடன்படிக்கை உண்டாகும். பிறகு அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். என்பது கொடிகளுக்குக் கீழ் அவர்கள் அணிவகுத்து உங்களுக்கெதிராகப் போர் தொடுப்பார்கள். அதில் ஒவ்வொரு கொடியின் கீழும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.” என்று நபி (ஸல்) கூறினார்கள். - இப்னுமாஜா 4042 “(ஒரு காலத்தில் அரபுகளாகிய) நீங்களும் “பனூ அஸ்ஃபர்” எனும் வெள்ளையர்க

சிவனின் இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது..

நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார். இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட  பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்". இந்த பதில் இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது. சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா? "ஔரங்சேப் - Aurangzeb". உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக் குறித்து பேரரசர் ஔரங்சேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு

முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்...

25ஆண்டுகளுக்கு முன் வி. டி. ராஜசேகர் ஷெட்டி எழுதிய கட்டுரை இந்த சமுதாயம் இறுதி அத்தியாயத்தில் இருக்கும் பொழுது தற்போது கட்டுரையை படிப்பது அவளம் *முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்* By *வி.டி.ராஜசேகர் ஷெட்டி* கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது. கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது. இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்க