புரட்சித் தலைவி அம்மா. அமீரா சிக்கந்தர் பேகம்...
<><><><><><><><><><><><><><> ஆலம்கீர் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்பட்ட மாமன்னர் அவுரங்க ஜேப் (1618 - 1707) அவர்கள் இறந்த பின் அரச குடும்பத்தில் குழப்பங்கள் பரவின. அதிகாரப் போட்டியால் அரச குடும்பம் வலிமையிழந்தது. அவுரங்கஜேபின் விரிந்த ஆளுகைக்குட்பட்ட (நிலப்பரப்பின் மாகாண ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோர் தத்தமது பகுதிகளை தனி அரசாக அறிவித்துக் கொண்டனர். தோஸ்த் முஹம்மது கான் என்ற ராணுவத் தளபதி போபால் பகுதியை தன்னுடைய தனி அரசாக அறிவித்து கொண்டார். கி.பி 1722 (ஹிஜ்ரி 1145) ஆம் ஆண்டில் அவர் தன் மனைவி பத்ஹ் பீபீ பெயரால் “பத்ஹேகர் என்றொரு கோட்டையைக் கட்டினார். பின்னர் ஹிஜ்ரி 1153-ல் அவர் மரணமடைந்தார். இவரைத் தொடர்ந்து போபால் நாட்டில் பனிரெண்டு அரசர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். கி.பி 1949ஆம் ஆண்டு போபால் நாடு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலம் வரை. இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அந்தப் பனிரெண்டு அரசர்களில் நால்வர் பெண்கள். அதாவது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 33% சதவீத இடஒதுக்க