யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்கள்...

யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் முதலாவதாக நிகழவிருப்பது...

1) எனது மரணம் (நபி ஸல்)

2) பைத்துல் மக்திஸை (முஸ்லிம்கள்) கைப்பற்றுவது.

3) உங்களிலும், உங்கள் சந்ததிகளிலும் (ஏராளமானோரை) உயிர்த்தியாகிகளாக மரணிக்கச் செய்யும் ஒரு (மாபெரும்) கொள்ளை நோய்.

4) அதன் பிறகு ஒரு மனிதருக்கு நூறு தீனார் (தங்கக் காசுகள்) கொடுக்கப்பட்டால், அதையே அவர் அற்பமாகக் கருதும் அளவுக்கு உங்கள் மத்தியில் செல்வம் பெருகி விடும்.

5) அதையடுத்து ஒரு முஸ்லிமின் வீட்டைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு உங்களை இன்னல்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கும்.

6)அதையடுத்து உங்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையில் ஒரு சமாதான உடன்படிக்கை உண்டாகும். பிறகு அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். என்பது கொடிகளுக்குக் கீழ் அவர்கள் அணிவகுத்து உங்களுக்கெதிராகப் போர் தொடுப்பார்கள். அதில் ஒவ்வொரு கொடியின் கீழும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

- இப்னுமாஜா 4042

“(ஒரு காலத்தில் அரபுகளாகிய) நீங்களும் “பனூ அஸ்ஃபர்” எனும் வெள்ளையர்களும் (மஞ்சள் நிற ஐரோப்பியர்கள் / Blonde) ஒரு சமாதான உடன்படிக்கையின் கீழ் இருக்கும் போது அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். எண்பது கொடிகளின் கீழ் (எண்பது அணிகளாக) ஒருங்கிணைந்து அவர்கள் உங்களுக்கெதிராகப் போர் தொடுக்க வருவார்கள். அதில் ஒவ்வொரு கொடியின் கீழும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள். (மொத்தம் ஒன்பது லட்சத்து அறுபதாயிரம் வீரர்கள்)” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

- இப்னுமாஜா 4095

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!