Posts

Showing posts from June, 2018

மக்கா இமாம் சேக் சுதைஸியை கேள்விகளால் துளைத்தெடுத்த ஸலாஹுத்தீன்....

மக்கா இமாம் சுதைஸி பெரும் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார். முஹம்மத் பகீஹுத்தீன் புனித ஹரம் ஷரீப் விவகாரங்களுக்கான தலைவரும் மக்கா இமாமுமான அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் சுதைஸி அவர்கள் கடந்த 28 ஜுன் 2018 வியழன் அன்று விசேட விருந்தினராக ஜெனீவாவிற்கு வருகை தந்தார். சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் அழைப்பின் பேரில் ஜும்மா நிகழ்த்துவதற்காகவும் அதனைத் தொடர்ந்து 'இஸ்லாத்தில் பாதுகாப்பும்-நடைமுறையும் அதனை பேணிப் பாதுகாத்தலும்' என்ற தொணிப் பொருளில் உரை நிகழ்த்துவதற்காகவுமே அவர் அங்கு வருகை தந்திருந்தார். மக்கா இமாம் அஷ்ஷெய்க் சுதைஸி அவர்கள் உரை நிகழ்த்திய பின்னர் அவரை நோக்கி பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. அதில் கத்தார் முற்றுகை, யெமன் மீது தொடுக்கப்பட்டுள்ள பேராட்டம், பொதுமக்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் இது குறித்து சவுதி அரசின் நிலைப்பாடுகள் பற்றிய கேள்விக் கணைகள் பாட்டமாய் பெய்யும் மழையாய் அவர் மீது பொழிந்தன. அப்போது சபையில் பலத்த சலசலப்பும் இரைச்சலும் ஏற்பட்டது. மக்ரிப் வரை நிகழ்ச்சி நடைபெற திட்டம் இருந்தும்

சவூத் குடும்பத்தை அமெரிக்கமயமாக்கல்...

Image
சவூத் குடும்பத்தை அமெரிக்கமயமாக்கல் (Americanization) செய்தி: கடந்த சில காலங்களில் இருந்தே சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் வருகைப் பற்றிய சலசலப்பு அமெரிக்காவில் இருந்தது. திறனுள்ள இந்த 32 வயது வாலிபர் அமெரிக்கவுடன் உறவுகளை நீடித்திருப்பதில் கவனமாக இருக்கின்றார், இதற்காக அனைத்து துறைகளிலிருந்தும் புகழ்ப்பெற்ற அமெரிக்க பிரமுகர்களை சந்தித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு திருப்பு முனையாக இவருடைய இந்த வருகை உள்ளது. கருத்து: முகமது பின் சல்மானின் (MBS) அமெரிக்க வருகை, அவருடைய லண்டனின் பயணத்திற்கு பின் ஆனது. அவரது ஆட்சியின் உறுதி நிலை பற்றிய உத்தரவாதத்திற்கும், நாட்டில் தான் கொண்டுவந்துள்ள சீர்திருத்த தொகுப்புகளைப் பற்றிய தெளிவான அங்கீகாரத்திற்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை MBS அளித்தார். அமெரிக்காவில் MBS இன் வருகை சவுதி மற்றும் பிரிட்டனுக்கு இடையிலிருந்த நூற்றாண்டுகள் கால உறவுகளை மறைத்துவிட்டது. இந்த முறை நடந்த இரு நாடுகளின் கூட்டத்தின் ஆழமும் அகலமும் அமெரிக்க-சவுதி உறவுகளின் வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் இர

கிலாபா ஏன் தேவை!!!

Image
கிலாபா ஏன் தேவை!!! கிலாபா ஆட்சிமுறை என்பது  மனித குலம் நிம்மதியாகவும் சிக்கல்கள் இன்றியும் வாழ அல்லாஹ்(சுப) அருளிய  இஸ்லாமிய வாழ்க்கை முறை; இதை நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்தான எமக்கு மதீனாவில் முன்னின்று பிரயோகித்து ஆட்சி செலுத்தி சுண்ணாவாக காட்டிச் சென்ற ஒரு அதிகார ஒழுங்காகும். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகு ஆட்சியின் கீழ் வாழ முயற்சிப்பது கட்டாயக் கடமையாகும். இத்தகு ஆட்சி இல்லாத போது அதை உருவாக்க நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி அதை அமைக்க முற்படுவது ஒரு முஸ்லிமின் அடிப்படை கடமையாகும். மேலும் அல்லாஹ் அருளாத வேறு ஒரு ஆட்சி முறையை உளப்பூர்வமாக தேர்வு செய்ய ஒரு முஸ்லிமுக்கு அனுமதியில்லை! 1.அவ்வாறு அல்லாஹ்(சுப) அருளாத ஆட்சி முறையை ஏற்றால் அது ஷிர்க்காகும். 2.கிலாபா ஆட்சியை அதன் அவசியத்தை மறுத்தால் அது நிராகரிப்பாகவும், பகிரங்க வழிகேடாகவும் இருக்கிறது. யா அல்லாஹ் வழிகேடானதும் நிராகரிப்பானதுமான ஆட்சிகளை வெறுத்து நீ அருளிய கிலாபா ஆட்சியை நேசித்து அதை அடைந்து கொள்ள தியாகத்துடன் உழைக்கும் பாக்கியத்தை எமக்கு தந்தருள்வாயாக!

பொது தேவைக்கு தனியார் சொத்துக்களை கையகப்படுத்தலும் இஸ்லாமிய நீதி பரிபாலனமும்.

பொது தேவைக்கு தனியார் சொத்துக்களை கையகப்படுத்தலும் இஸ்லாமிய நீதி பரிபாலனமும். உமரும் - எட்டுவழிச் சாலையும் ---------------------------------------------------------------------- மதீனாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போன சமயம் அது , தொழுகையாளிகளின் எண்ணிக்கையும் அதிகமானதால் ஹிஜ்ரி 17-ல் மஸ்ஜிதுந் நபவியை விரிவாக்கம் செய்யும் போது சுற்றியிருந்த இடங்கள் அரசால் விலைக்கு வாங்கப்பட்டன. ஆனால் #அப்பாஸ்(ரழி) தன் வீட்டை விற்க மறுத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கீடாக பெரும்தொகை தர கலீபா  #உமர்(ரழி)  முன் வந்தார்கள், ஆனாலும் அப்பாஸ்(ரழி) உடன்படவில்லை. வழக்கு ஷரியத் நீதிமன்றம்  செல்கிறது நீதிபதியாக #உபை_இப்னு_காப்(ரழி) உள்ளார்கள். வழக்கின் முடிவில்  தீர்ப்பில் என்ன வந்தது தெரியுமா ? " பலவந்தமாக இடத்தை வாங்க உமருக்கு(ரழி) எந்த உரிமையும் கிடையாது " என தீர்ப்பளிக்கப்பட்டது (மேற்கண்ட சம்பவம் #அல்லாமா_ஷிப்லி #நுஃமானி (ரஹ்) எழுதிய #உமர்_கத்தாப் புத்தகத்தில் உள்ள செய்தி ((((( இதில் Abu Hafs சொன்ன கூடுதல் தகவலையும் கீழே இணைக்கிறேன் *********************************** இ

NGO நிறுவனங்களும், அவற்றின் பிண்ணனியும் !!!

Image
NGO நிறுவனங்களும், அவற்றின் பிண்ணனியும்!!! "அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்? நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக: தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன? NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை.  தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது. NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நட

ஐ.நா, வீட்டோ, பார்வையில் உலகம். (ஒரு குறிப்பு)...

ஐ.நா, வீட்டோ, பார்வையில் உலகம். (ஒரு குறிப்பு) 1.கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல். 2.பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். 3.மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல். 4.இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். 5.உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது. மேற்படி இலக்குகளை கொண்டு உருவாக்க பட்டதே ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்ற பல நாடுகளைக் கொண்ட பன்னாட்டு  அமைப்பாகும். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத்  தொடர்ந்து

ஒரே சமுதாயம் - ஒரே பிறை - ஒரே பெருநாள்.....

Image
ஒரே சமுதாயம் - ஒரே பிறை - ஒரே பெருநாள்..... இது இந்தியாவில் வெளியிடப்பட்ட ஓர் துண்டுப்பிரசுரம்... “மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”. ( 3:103)  ரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கடமையாகும் (Fardh). இது அல்லாஹ் (சுபு) முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார வாரியான அளவுகோல் பின்பற்றப்படுவதால் முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள்.  இதனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறு (மூன்று நாட்கள் வித்தியாசம்) நாட்களில் நிகழ்கிறது. அல்லாஹ் (சுபு) குறிப்பிட்ட பகுதி என்று எல்லையை பிரிக்காமல் அமைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான். “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங

எப்படி ஒரு நபருக்கு இரு நிலைப்பாடு இருக்க முடியும்!!!!

மனிதனின் மூளையானது ஒன்றை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற அடிப்படையை கொண்டது. மனிதர்களை படைத்த அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்க்கும் நேர்வழி காட்டும் தூதரையும், வேதத்தையும் அனுப்பி வைத்தான் அத்தூதர்கள் சத்திய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைத்தார்கள். ஆனால் ஷைத்தானோ உலக ஆசைகளை மக்களுக்கு காட்டி வழிகேட்டின் பக்கம் அழைத்தான். உலகில் இரு சித்தாந்தம்தான் ஒன்று இஸ்லாம் மற்றொன்று குப்ரு. மனித மூளையானது இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தால் அது சொர்க்கத்திற்க்கு வழி வகுக்கும்!!! மாறாக குப்ரை தேர்ந்தெடுத்தால் நஷ்டமே!!! ஆனால் முஸ்லிம்கள் பலர் ஆன்மீக விடயத்தில் இஸ்லாத்தையும் அரசியல் விடயத்தில் குப்ரையும் தேர்வு செய்துள்ளனர்!!! எப்படி ஒரு நபருக்கு இரு நிலைப்பாடு இருக்க முடியும்!!!! இதுதான் ஒரே குழப்பமா இருக்கு!!!!

பிறைபார்த்தல்....

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:- "ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111) தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge - 336) தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு) தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்பட

இமாம் மஹ்தீ (அலை)...

இமாம் மஹ்தீ (அலை) அவர்கள் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகிற்கு இறங்கும் முன்பு இவ்வுலகிற்கு வருவார்கள். இவர்கள் பற்றி ஹதீஸ்களில் முன்னறிவிப்பு காணக்கிடைக்கின்றன. 1.ஆட்சியும் பெயரும்:     இமாம் மஹ்தீ அவர்கள் அரபுகளை ஆட்சி செய்வார்கள் என்றும் நபி (ஸல்) அவர்களின் பெயரோடு மஹ்தீ அவர்களின் பெயர் ஒத்திருக்கும் என்பதும் இவ்வுலகம் முடிவதற்கு முன்பு அவர்கள் எப்படியும் வர இருக்கிறார்கள் என்பதை, 'இவ்வுலகில் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை நீட்டுவான்' என்ற ஹதீஸும் கீழ்காணும் மற்ற ஹதீஸ்களிலிருந்தும் பெறப்படும் உண்மைகளாகும்.     'என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூல்கள்: திர்மிதி 2331, அபூதாவூது 4269)     'என் குடும்பத்தைச் சோந்த ஒருவர் ஆட்சியமைப்பார். அவர் பெயர் என் பெயரை ஒத்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்