மக்கா இமாம் சேக் சுதைஸியை கேள்விகளால் துளைத்தெடுத்த ஸலாஹுத்தீன்....
மக்கா இமாம் சுதைஸி பெரும் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார். முஹம்மத் பகீஹுத்தீன் புனித ஹரம் ஷரீப் விவகாரங்களுக்கான தலைவரும் மக்கா இமாமுமான அஷ்ஷெய்க் அப்துல் ரஹ்மான் சுதைஸி அவர்கள் கடந்த 28 ஜுன் 2018 வியழன் அன்று விசேட விருந்தினராக ஜெனீவாவிற்கு வருகை தந்தார். சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பா இஸ்லாமிய மத்திய நிலையத்தின் அழைப்பின் பேரில் ஜும்மா நிகழ்த்துவதற்காகவும் அதனைத் தொடர்ந்து 'இஸ்லாத்தில் பாதுகாப்பும்-நடைமுறையும் அதனை பேணிப் பாதுகாத்தலும்' என்ற தொணிப் பொருளில் உரை நிகழ்த்துவதற்காகவுமே அவர் அங்கு வருகை தந்திருந்தார். மக்கா இமாம் அஷ்ஷெய்க் சுதைஸி அவர்கள் உரை நிகழ்த்திய பின்னர் அவரை நோக்கி பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. அதில் கத்தார் முற்றுகை, யெமன் மீது தொடுக்கப்பட்டுள்ள பேராட்டம், பொதுமக்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் இது குறித்து சவுதி அரசின் நிலைப்பாடுகள் பற்றிய கேள்விக் கணைகள் பாட்டமாய் பெய்யும் மழையாய் அவர் மீது பொழிந்தன. அப்போது சபையில் பலத்த சலசலப்பும் இரைச்சலும் ஏற்பட்டது. மக்ரிப் வரை நிகழ்ச்சி நடைபெற திட்டம் இருந்தும்