மஹ்தி (அலை) ஹதீஸ்...
மஹ்தி காலம் ஹதிஸ்: *மினா சண்டை* 1) அம்ர் இப்னு ஷுஅய்ப் ரஹ் அவர்கள் தன் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்: துல்காயிதாவில் கோத்திரத்தார்களுக்கு மத்தியில் சண்டை (வாக்குவாதம் சச்சரவு) ஏற்பட்டு வரம்பு மீறுவார்கள் ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் (தாக்கப்பட்டு) கொள்ளையிடப்படுவார்கள். மினாவில் (மல்ஹமா) சீற்றமான போர் ஏற்படும் அங்கு மக்கள் பலரின் இரத்தம் சிந்தப்படும் எதுவரையெனில் இரத்தம் ஜும்ராத் அல் அக்பா (ஷைத்தானுக்கு கல் எரியப்படும் இடம்) வரை ஓடும். அப்போது அவர்கள் ஒரு மனிதரை தேடி ஓடுவார்கள், அவரை (ஹஜ்ருல் அஸ்வத்) முனைக்கும் மகாமே இப்ராஹிம் இடத்திற்கும் இடையே காண்பார்கள், வழுகட்டாயமாக அவருக்கு ( இந்த உம்மத்தை தலைமையேற்று நடத்த) பையத் செய்வார்கள். (அச்சமயம்) அவரிடம் (மஹ்தியிடம்) கூறப்படும் நீர் பையத் வாங்க மறுத்தால் உம் கழுத்தை வெட்டிவிடுவோம் என்று அப்போது பையத் செய்யும் மக்களின் எண்ணிக்கை பத்ரு போரில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும் (313). அதன்பின் வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைவார்கள் என்று நபி ஸல் கூறினார்கள். நூல் : நுஅயிம் இப்னு