கசப்பாயினும் உண்மைகள்...
கசப்பாயினும் உண்மைகள்... முஸ்லிம் உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பிரிட்டிஷ் காலனித்துவ வாதிகளால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டனவே ஈரானில் பஹாயிசம், இந்தியாவில் காதியானிஸம், அரேபியாவில் வஹாபிஸம் ஆகும். ஏற்கனவே நலிவடைந்திருந்த உதுமானிய கிலாபத் மீண்டும் வீறுபெற்றுவிடக்கூடாது; முஸ்லிம்களை அவர்களின் மார்க்கத்தின் அடிப்படைகளைக் கொண்டே பிரித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அமுலாக்கலே மேற்படி பிரிவுகளாகும். ஈரானிய உலமாக்களும் இந்திய உலமாக்களும் விழித்துக்கொண்டனர்; இந்த சதித்திட்டத்தை சரியாக புரிந்துகொண்டனர். ஆதலால், அந்நாடுகளில் பஹாயிஸமும் காதியானிஸமும் தழைக்கவில்லை. ஆனால், அறேபியாவில், எவ்வழியிலாவது அதிகாரம் தம்வசம் வரவேண்டும் என்பதற்காக, இஸ்லாத்துடன் பரிச்சயமற்ற இப்னு ஸுஊது வஹாபிஸத்தை வாரி அணைத்துக்கொண்டார். இப்னு வஹாப் அதற்கு உறுதுணையாக இருந்தார் என்கிறது சரித்திரம். (இப்னு ஸுஊது என்பவர், நாம் இங்கு பாதாள உலக கோஷ்டி என்போமே அது போன்ற ஒரு கோஷ்டிக்கு தலைவனாய் இருந்தவர்). பஹாயிஸமோ அல்லது காதியானிஸமோ இடம் மாறி அரேபியாவில் தோற்றுவிக்கப்பட்டிருந்தால்