Posts

Showing posts from March, 2018

இஸ்லாமிய ஆட்சியில் அபாயகரமான தொழிற்சாலைகள நிறுவப்படுமா??

Image
ஐயம்:- இன்றைய ஆட்சியாளர்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நாசகர திட்டங்கள் நிறைவேற்ற துடிப்பது போல்! இஸ்லாமிய ஆட்சியில் மக்களை அச்சுறுத்தி வாழ்வாதாரத்தை சீரழிக்கும் திட்டங்கள், அபாயகரமான தொழிற்சாலைகள் நிறுவப்படுமா? #கிலாஃபத் #நாசகரதிட்டங்கள் #ஸ்டெர்லைட் #ஹைட்ரோகார்பன் #மீத்தேன் #அணுமின்நிலையம் #நிலக்கரி #நதிநீர்பங்கீடு - Ahamed Amani தெளிவு:- அனைத்து அறிவியல் அனுகூலங்களையும் மக்களின் காலடியில் கொண்டு வந்து குவிப்பது இஸ்லாமிய அரசின் கடமை. பூலோக நன்மைகளை உம்மத்தின் தேவையை போக்க உபயோகிக்கும் போது தெளிவான ஆபத்து இருக்கும் எனத் தெரியும் அறிவியல் திட்டங்களை அவர்கள் செயலுறுப்படுத்த மாட்டார்கள். இன்று முதலாளித்துவ கேந்திரம் இந்த அறிவியலை பயன்படுத்துவதைக் காட்டிலும் பல நூறு மடங்கு பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். உதாரணமாக இன்றைய சூழலில் தோரியத்தினால் இயங்கும் கார்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தாமல் தடை உண்டாக்கி பெட்ரோல் , டீஸல்  வாகனத்தை மட்டும் புழக்கத்தில் விட்டுள்ள வியூகத்தை உடைத்து எறியும் அந்த கிலாஃபா அரசு. தோரியம் குறித்து கொஞ்சம் புரிந்து கொள்ள.

சிறு சிந்தனைகள் தொகுப்பு - 9

1) ஸ்டெர்லைட், விவசாயம், நிலக்கரி, ஹைட்ரோகார்பன் என மக்கள் ஜுவாதார பிரச்சனைகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய மாநிலத்தின் முதல்வரும் நாட்டின் பிரதமரும் வாய்மூடி மொனியாக வேடிக்கை பார்க்கின்றனர். மக்களிடம் ஓட்டு பிச்சை வாங்க வாய் கிழிய பேசிய பச்சோந்திகள் இன்று மக்களை வஞ்சிக்கின்றன. மாற்றம் வரும் என்று ஓட்டு போட்ட மக்கள் இன்று நடுத்தெருவில் கையேந்தி நிற்க்கும் சூழல். மக்களே #மக்களாட்சி மாய அரசியலை புரிந்து கொள்ளுங்கள் மாற்ற வேண்டியது ஆள்பவனை அல்ல ஆட்சி செய்யும் முறையை!!! 2) இந்தியாவிற்க்கு இஸ்லாமிய ஆட்சி ஒத்துவராது!!! வல்லோன் வகுத்த வாழ்வொழுங்கு எப்படி இந்தியாவிற்க்கு மட்டும் பொறுந்தாமல் போகும்! இஸ்லாம் என்பது வாழ்வியல் சித்தாந்தம்! சத்திய சோதனைகளுக்கு மத்தியில் நன்மையை ஏவி தீமையை தடுத்து மறுமைக்கான தயாரிப்பு செய்வதே அதன் சாராம்சம். மாறாக அது வெறும் சடங்கு சம்பிரதாயம் அல்ல! 3) மது, மாது என சமுக சீர்கேடுகள் அதிகரித்து போன இந்த நவீன ஜாஹிலியா காலத்தில் சத்திய மார்க்கத்தை பள்ளியில் பூட்டி முடக்கி விட்டு அமலை நிரைவேற்றினால் மட்டும் ம

மார்ச் 31 கறுப்பு நாள்..

Image
மார்ச் 31 கறுப்பு நாள்.. ஆஃபியா கடத்தப்பட்டு அமெரிக்காவுக்கு விற்கப்பட்ட நாள். பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr.ஆஃபியா 2003 மார்ச் 31ல் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார்.  “உஸாமா பின் லேடனின் அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்ல முடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார். இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.  அவர் சகோதரி ஆஃபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி செயற்பட்டு வந்தார். சுயநினை விழந்து, பற்கள் மற்றும் மூக்கு உடைந்து, உதடுகள் கிழிந்து படுபயங்கரமான தோற்றத்துக்கு அப்பெண் மாற்றப்பட்டுள்ளதாக ரெட்லி குறிப்பிடுகின்றார். ஒரு கூட்டத்தினிட

கலிபா அப்துல் முஅத்தசீம்...

அது கலீபா முஅத்தசீம் காலம்.... ஒரு முஸ்லிம் பெண் ரோமர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். தொடர்ந்து பல இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறாள் அந்த ரோமர்களால்.. ஒரு கட்டத்தில் அப்பெண் கலீபா முஅத்தசீம் என்று கத்துகிறாள்... அதற்கு அந்த ரோமர்களின் தலைவன் ஆம் உண்மையில் முஅத்தசீம் வெள்ளை பற்றும் கருப்பு குதிரைகளின் மீதேறி வந்து கொண்டிருக்கிறார் உன்னை மீட்க என்று நையாண்டி செய்கிறான்.. இது எப்படியோ கலீபாவின் காதிற்கு எட்டுகிறது . உடனே கலீபா படைகளை திரட்டுகிறார்.. அதன் ஒரு முனை ரோமிலும் இன்னொரு முனை துருக்கியிலும் இருக்கிற அளவிற்கு நீளமான படை திரட்டப்படுகிறது.... அதில் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளாக திரட்டப்படுகிறது. ரோமர்களின் படை சுக்கு நூராக்கப்பட்டு தோற்கடிக்கப்படுகிறது.. அந்த பெண்ணும் அந்த ரோமர்களின் தலைவனும் கலீபாவின் முன் கொண்டு வரப்படுகிறார்கள். கலீபா அந்த பெண்ணிடம் கூறினார்.. இப்பொழுது சொல் கலீபா ,கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரையில் வந்து என்னை மீட்டர் என்று. இன்று நடப்பதோ வேறு .... அதே துருக்கி ...... இஸ்ரேலில் தினம் தினம் முஸ்லிம்கள் கொல்லப்படும் நி

ஆபியா - மேற்க்குலகின் பெண்ணியவாத கூக்குரலும் யதார்த்தமும்...

இதுதானுங்க சுரண்டல் முதலாளித்துவ மேற்குலகு #பெண்ணிற்கு கொடுக்கும் கண்ணியம். 86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும் நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபீயா சித்தீகி.                                                அதிர்ச்சி தரும் சித்திரவதைகள் டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி.. ஆபியா சித்தீகி 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார். டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப் படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது.  மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி

சமூகமும் அரசியல் அதிகார பின்புலமும்...

Image
ஒரு சமூகம் அதன் தனித்துவத்தை தக்க வைக்க வேண்டுமெனில் அதைப்பாதுகாக்கும் அரசியல் அதிகார பின்புலம் அச்சமூகத்துக்கு இருப்பது இன்றியமையாதவொன்றாகும். அப்படியான அரசியல் அதிகார பின்புலம் இல்லாதவிடத்து அச்சமூகம் அதன் தனித்துவத்தை பலவந்தமாகவோ, சமரசமெனும் பெயரிலோ இழக்க நேரிடும். அல்லது அதைவிடக்கேவளமான முறையில் சிந்தனை வீழ்ச்சியென்ற நோய் மூலம் அச்சமூகம் அதன் தனித்துவத்தில் தானே குறைதேடி அதை சீர்திருத்தம் செய்கிறோமெனும் பெயரில் வேறொரு சமூகத்தினது சாயலுக்கு மாறி விடும். அது இஸ்லாத்தைப்பொறுத்தளவில் இன்றைய நிதர்சனமான விடயமாகும். ஏனெனில் இன்று தன்னை, தனது தனித்துவத்தைப்பாதுகாக்கும் எந்த வித அரசியல் அதிகார பின்புலமும் அற்ற நிலையில் தான் இஸ்லாம் இன்று உள்ளது. இதே நிலை தொடருமாயின் முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாத்தினதினது தனித்துவமான அம்சங்கள் பிரதிபளிக்காமல் வெறுமனே பெயரளவில் முஸ்லிமான நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்படுவார்கள். இஸ்லாத்தினது தனித்துவமானது தொடர்ந்தும் முஸ்லிம்களது வாழ்வில் பிரதிபளிக்க வேண்டுமெனில் இஸ்லாம் ஒரு தகுதிவாய்ந்த அரசியல் அதிகார பின்புலத்தை தன்னகத்தே கொண்ட நிலைக்கு மீளவே

சிறு சிந்தனைகள் தொகுப்பு - 8

1) மனோஇச்சை எனும் சிந்தனையை ஜனநாயக குப்பைக்குள் ஒழித்து வைத்து!!! சுதந்திரம் எனும் அடிமைத்தனத்தை பிரகடனம் செய்து அநீதியை அங்கீகராத்தோடு செய்வதுதான் அரசு என்றாகிவிட்டது. இஸ்லாத்தின் பார்வையில் அரசு என்பதே மக்கள் நலன் பேணுவதுதான்!!! 2) அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும், அவனது வேதத்தையும், அவனது தூதரையும் ஏற்றுக் கொள்ளாத நிராகரிப்பாளனுக்கு ஆதரவு தெரிவித்து என்னை ஆட்சி செய்ய உனக்கு அதிகாரத்தை தருகிறேன் என்ற அர்த்தத்தில் ஓட்டு போடுவது சரியா???  இது இஸ்லாத்தின் வழிமுறையா? கொஞ்சம் சிந்தியுங்கள்!!! 3) குப்பாருக்கு கும்பிடு போட்டு ஆட்சி அமைத்து அமைதி மார்க்கம் இஸ்லாத்தை மேலோங்க செய்யப் போகிறார்களாம்!!! லாத், உஜ்ஜா, மனாத் ஆகியவற்றை வணங்கினால் எப்படி இஸ்லாம் மேலோங்கும் சிந்தியுங்கள்!!! 4) மனிதனை மனிதன் தேர்தலில் ஒட்டு போட்டு தேர்வு செய்து தனக்கான சட்டங்களை சட்டமன்றம், பாராளுமன்றம் மூலம் தேர்வு செய்வது என்பது திட்டமான இணைவைப்பே!!! மனிதகுலத்தின் வாழ்வொழுங்கை வடிவமைப்பவன் இறைவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்!!! #இஸ்லாமிய_வாழ்வியல்

மன மாற்றம் கண்டு வரும் தமிழக/இந்திய முஸ்லிம்கள்...

Image
மன மாற்றம் கண்டு வரும் தமிழக/இந்திய முஸ்லிம்கள் . மேட் இன் அமெரிக்க நவீன (மாடரேட்) இஸ்லாத்தை வளைகுடா நாடுகள் உள்ளிட்ட  முஸ்லிம் நாடுகளுக்கு சமீபத்தில் ஏற்றுமதி செய்ததன் பலன் வெளிப்பட ஆரம்பிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சவூதி மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் போர்த்தி இருந்த ஆன்மீக போர்வையின் சாயம் வெளுத்து , இற்றுப் போய் கிழிந்து தொங்குகின்றது. முன்பெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியாகவும் ,  பெருவாரியான இந்திய முஸ்லிம்களால் குறை காணப்படாத அரசாகவும் அரபுலக நிர்வாகம் திகழ்ந்து வந்தது என்றால் அது மிகையல்ல . ஆனால் தற்போதைய சூழலில் முஹம்மத் இப்னு சல்மானின் நடவடிக்கைகள் முற்றிலும் அமெரிக்க அடிமைத் தனத்தை  ஒத்திருப்பதாகவும் , தீனை தகர்க்கும் நேரடி செயல்பாடாகவும் , சாதாரண அரசியலறிவுடைய மக்களும் உணரத் தலைப்பட்டுவிட்டனர். பொதுவாகவே அரசியல் ஞானத்தில் பின் தங்கிக் காணப்படும்  மூன்றாம் உலக மக்களான இந்தியர்களும்  கூட மேற்கண்ட ஆட்சியாளர்களது அயோக்கியத்தனத்தால் மிகவும்  திடுக்குற்றுள்ளனர். முந்தைய காலங்களில் அரபுலகிற்கென தனித்த மரியாதையை உள்ளத்தில

உதுமானிய கிலாபத் ஆட்சி காலத்தில்...

Image
உதுமானிய கிலாபத் ஆட்சிகாலத்தில் வீட்டின் நுழைவாயில் கதவின் ஒருபக்கத்தில் மெல்லிய இரும்பு வளையமும்,மறுபக்கம் தடித்த இரும்பு  வளையமும் இணைக்கப்பட்டிருக்கும். வீட்டிற்கு பெண்கள் வந்தால் மெல்லிய வளையத்தைத் கதவில் அடிப்பார்கள் வந்திருப்பவர் பெண் என அறிந்து வீட்டினுள்ளே இருக்கும் பெண்கள் கதவைத்திறப்பார்கள். ஆண்கள் வந்தால் தடித்த இரும்புவளையத்தால் தட்டுவார்கள். ஆண்கள் வந்து கதவைத் திறப்பார்கள். அதேபோன்று வீட்டில் முதியோர்களோ,நோயாளிகளோ இருந்தால் வீட்டு வாசலில் சிவப்பு நிற ரோஜாவை தொங்கவிடுவார்களாம். அவ்வீட்டின் வழீயே், பொருட்களை கூவி விற்கும் வியாபாரிக்ள், பாட்டுப்பாடிச் செல்லும் நாடோடிகள், வாசலில் விளையாடும் குழந்தைகள், உரக்கப் பேசிய படியே செல்வோர் இவ்வீட்டினுள் முதியவர்கள்,நோயாளிகள் இருப்பதை உணர்ந்து  மௌனமாக செல்வார்களாம்.   என்ன ஒரு பண்பாடு மிக்க சமுதாயமாக இருந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்.       ---அரபி இணையதளத்திலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி

முஸ்லிம்களின் பிரச்சனைக்கு கிலாபத்தே ஒரே தீர்வு - இலங்கை...

Image
நேற்றைய(26.03.2018) நவமணி பத்திரிகையில் பிரசுரமான ஊடகவியலாளர் M .I முபாறக் அவர்களினால் எழுதப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு  கிலாபாத்தே தீர்வு என்ற கட்டுரை. 👇👇 #முஸ்லிம்களின்_பிரச்சினைகளுக்கு_கிலாபத்தே_ஒரே_தீர்வு =============== முஸ்லிம்களுக்கு எதிரான கண்டிக் கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் சிந்திக்கத் தொடங்கியுள்ள தருணம் இது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இனவாத-பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு எப்படிப்பட்ட தீர்வுகள் முன்வைக்கப்பட்டாலும் அவை அனைத்தும் தற்காலிகமானவையே தவிர நிரந்தரமானவை அல்ல என்பதையும் எம் எல்லோரையும் படைத்த அல்லாஹ்வால் சிபாரிசு செய்யப்படுகின்ற கிலாபத் ஆட்சி  முறையே நிரந்தரமான தீர்வு என்பதையும் தெளிவுபடுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். கிலாபத் என்றதும் இப்போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் கூறித் திரியும் போலிக் கிலாபத் என்று நினைத்துவிட வேண்டாம். அது கிலாபத் பற்றி பிழையாகச் சித்திரித்து முஸ்லிம்களே கிலாபத்தை வெறுக்க வைப்பதற்காக அமேரிக்கா செய்யும் சதியாகும். நாம் இங்கு சொல்ல வருவது இறைத்தூதர

சவுதி ஆட்சியாளர்கள்...

சவுதி ஆட்சியாளர்கள்... செய்தி: 2018 ல் ஒவ்வொரு மாதமும் அரசு பணியாளர்களுக்கும் 1,000 ரியால் (சுமார் 266 டாலர்) வழங்க சவூதி அரசர் சல்மான் கட்டளையிட்டுள்ளார். “50 பில்லியன் ரியால் ஒதீக்கீடு செய்த இந்த அரசாணை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் சவூமி தலைமை எவ்வளவு அக்கறை எடுத்துகொள்கிறது என்பதை குறிக்கின்றது” என கலாச்சாரம் மற்றும் செய்தி துறையின் அமைச்சர் அவாது பின் ஸாலிஹ் அல் அவாது செய்தியாளர்களுக்கு கூறினார் (Source: Reuters) கருத்து: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள் : «لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ»قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ آلْيَهُودَ وَالنَّصَارَى؟ قَالَ:«فَمَنْ؟» “நீங்கள் உங்களுக்கு முன்னாடி இருந்தவர்களின் அடிச்சுவட்டை முலமுக்கு முலம் ஜானுக்கு ஜான் பின் பற்றுவீர்கள், அவர்கள் ஒரு பள்ளியின் பொந்துக்குள் நுழைந்தாலும் அவர்களை நீங்கள் பின்பற்றுவீர்கள்” என கூறினார்கள். இதற்கு நாங்கள் (சஹாப்பாக்கள்) ‘ யூதர்களும் கிருஸ்தவர்களையு

ஆமீன்...

ஆமீன்... உயிர்களின் பெறுமதி தெரியா கயவர்களால் துன்புறுத்தப்படும் எமது உம்மத்துகள் கலிமா சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காக ஸிரியா, பலஸ்தின், கஷ்மீர், சின்ஜியாங்,  ரோஹிங்கியா,  முஸ்லிம்களையும், பச்சிளம் குழந்தை களையும்,கற்பினித்தாய்மார்களையும், வயோதியர்களையும் மிருகத்தை விட கேவலமாக கொன்று குவித்துக் கொண்டு, காடுகள்,மேடுகள்,ஆறுகள் என்று பாராமல் துரத்தி அடிக்கும் குஃப்ரிய ராணுவமே, கங்கானிகளே... விளங்கிக் கொள்ளுங்கள் உங்களைப்போன்று எத்தனயோ அநியாயம் செய்த கூட்டங்களுக்கு என்ன நடந்தது என்பதை வரலாற்று ரீதியாகவும் ஏன் எங்கள் வாழ்நாட்களில் கூட கண்ணால் கண்டு விட்டோம்... இந்த உலகம் உண்மையான முஸ்லிமுக்கு சோதனைக் களம் தான் அதே நேரம் நீங்கள் நேர்வழி கிடைக்காமல் மரணித்தால் நீங்கள் இவ்வுலகில் எங்கள் உறவுகள் மீது  போடும் நெருப்பை விட 70 மடங்கு காய்ச்சிய நெருப்பில் என்றென்றும் உங்களை படைத்தவன் போடத்தான் போகின்றான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. இறைவன் படைத்த படைப்பினங்கள் அனைத்துக்கும் மனிதாபமானம் என்ற ஒன்றை வைத்துத்தான் படைத்துள்ளான் ஆனால் உங்கள் விடையத்தில் நாங்கள் கண்ணால் காணும் சித்திரவதைக்