ஆமீன்...

ஆமீன்...

உயிர்களின் பெறுமதி தெரியா கயவர்களால் துன்புறுத்தப்படும் எமது உம்மத்துகள் கலிமா சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காக
ஸிரியா, பலஸ்தின், கஷ்மீர், சின்ஜியாங்,  ரோஹிங்கியா,  முஸ்லிம்களையும், பச்சிளம் குழந்தை களையும்,கற்பினித்தாய்மார்களையும், வயோதியர்களையும் மிருகத்தை விட கேவலமாக கொன்று குவித்துக் கொண்டு, காடுகள்,மேடுகள்,ஆறுகள் என்று பாராமல் துரத்தி அடிக்கும் குஃப்ரிய ராணுவமே, கங்கானிகளே... விளங்கிக் கொள்ளுங்கள் உங்களைப்போன்று எத்தனயோ அநியாயம் செய்த கூட்டங்களுக்கு என்ன நடந்தது என்பதை வரலாற்று ரீதியாகவும் ஏன் எங்கள் வாழ்நாட்களில் கூட கண்ணால் கண்டு விட்டோம்...

இந்த உலகம் உண்மையான முஸ்லிமுக்கு சோதனைக் களம் தான் அதே நேரம் நீங்கள் நேர்வழி கிடைக்காமல் மரணித்தால் நீங்கள் இவ்வுலகில் எங்கள் உறவுகள் மீது  போடும் நெருப்பை விட 70 மடங்கு காய்ச்சிய நெருப்பில் என்றென்றும் உங்களை படைத்தவன் போடத்தான் போகின்றான் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

இறைவன் படைத்த படைப்பினங்கள் அனைத்துக்கும் மனிதாபமானம் என்ற ஒன்றை வைத்துத்தான் படைத்துள்ளான் ஆனால் உங்கள் விடையத்தில் நாங்கள் கண்ணால் காணும் சித்திரவதைக் காட்சிகளைப் பார்க்கும் போது இரத்தம் கொதிக்கின்றது..
அழுகுரல்களையும் , அவலக் காட்சிகளைப் பார்த்து செய்வதறியாது இதயம் அழுகிறது. மனிதாபமானம்
இல்லாத கொடியமிருகம்
நீங்கள் என்று
உறுதியாகின்றது..

வரக்கூடிய காலத்தில் - வளரக்கூடிய சந்ததிகள், கொடியமிருகங்களின் பட்டியலில் உங்களையும், அடக்குமுறையான ஆட்சியாளர்களையும் இணைத்துத்தான் வரலாற்று பாடமாக படிக்கும்.

பாதிக்கப்படும் உம்மாவை,
மனிதாபமானம் என்று மார்தட்டி சொல்லும் நாடுகளும்,
அறபு இராஜ்ஜியங்கள் என்று சொல்லும் அறபு நாடுகளும் கூட மனித இனமாகவே கருதாமல் கண்டும் காணாமல் இருப்பது 'இஸ்லாம்,
அரசியலில் -  ஆட்சியதிகாரத்தில் நிலைப்பெற்றுவிடக்கூடாது, முஸ்லிம்கள் மறுமலர்ச்சி அடைந்திடக்கூடாது, மனிதசமூகம் அநீதத்திலிருந்து விடுதலை அடைந்து இஸ்லாமிய நீதமான அரசின்கீழ் வாழ்ந்திடக்கூடாது'
என்கிற ஒரேக்காரணம்தான்
இருக்கிறது எனும உண்மையை உம்மா விளங்கிக்கொண்டுதன் வருகின்றது.

எனவே இஸ்லாமிய சொந்தங்களே!..
நாம் இப்போது இருந்து கொண்டிருப்பது தலைமையை இழந்த ரஜப் மாதத்தில். இந்த தலைமையை இழந்தப்பிறகுதான் நமக்கு இவ்வளவு அழிவும், இழிவும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

எமது  உறவுகள் எங்கும் உயிருக்கும், உடமைக்கும் போராடி எங்கே செல்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு அகதிகளாக்கப்பட்டு மிக மோசமான நிலையில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
(ஸஹீஹுல் புகாரி: 2442. , அத்தியாயம்: 46. 

எனவே  அவர்களுக்காக
எம் கையில் இருக்கும் ஒரேயொரு ஆயுதமான 'இஸ்லாமிய தலைமையை'
விரைவில் ஏற்பட துஆ செய்வோமாக... 
அதற்காக நபிவழியில்
முயற்சிப்போமாக...

ஈமான் கொண்ட ஒரே காரணத்துக்காக குஃப்ஃபார்களால் கொன்றொழிக்கப்படும் சகோதர , சகோதரிகளே !... நீங்கள் வீசேட சொர்க்க வாசிகள் .. ஏனெனில் உங்களுக்கு ஷஹீதுகள் பட்டம் கொடுத்து இன்ஷாஅல்லாஹ்  சொர்க்கத்தில் உயர்ந்த தரஜாவில் அல்லாஹ்(சுபு) நுழையவைப்பான்.

எல்லாம் வல்ல நாயன் உலக முஸ்லிம்களை ஒரு தலைமையின் கீழ் வாழவைத்து  பொருந்திக் கொள்வானாக!!!...
ஆமீன்.
ஆமீன்..
யாரப்பில் ஆலமீன்...

- abuaslam

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!