Posts

இரசாயன பூச்சிக்கொல்லிகள் மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?

இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது! இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது! பூச்சிக்கொல்லிகளை பூச்சிக்கு மட்டும் அடிப்பதில்லை பயிருக்கும் சேர்த்தே அடிக்கிறோம். கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகம், பல வகைகளில் நம் உடலில் சேரும் இப்பூச்சிக்கொல்லி விஷம், மனித உடலை கொல்லக் கூடிய அளவில் இல்லை என்றாலும், இது மரணத்தை ஏற்படுத்தாமல் கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது. படிப்படியாக உடலில் சேர்ந்து உள் உறுப்புகளை பாதித்து நம்மை நிரந்தர நோயாளியாக்குகிறது. *எண்டோசல்பான் என்ற எமன்* *இராசயன பூச்சிக்கொல்லிகள்* *மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?* கேரளாவில் காசர்கோடு மற்றும் சில பகுதிகளில் 4696 ஹெக்டேரில் கேரள அரசாங்கத்துக்குச் சொந்தமான முந்திரித் தோப்புகளில் 1976 முதல் 2001 வரை ஹெல

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )!!!

“ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்." இந்தப்பெயர் பலருக்குத் தெரியாது . இரத்தம் சிந்தும் அரசியலான யுத்தத்தை ஒரு சர்வாதிகாரியின் சுயநலத்துக்காக வெற்றிகளாக குவித்துக் கொடுத்த ஒரு களத் தளபதி . ஹிட்லர் யுகத்தின் கீழ் ஆச்சரியமாக  உறுதி மிக்க யுத்த தர்மம் பேணிய ஒரு வீரன். அவர் தான் ஜெனரல் எர்வின் ரோமல்.   முதல் உலக யுத்தம் 1914இல் தொடங்கியது. அதில் ரொமெல் பிரான்சிலும், ருமானியா நாட்டிலும் யுத்தத்தில் பங்கு பெற்றார். இந்தப் போர்களில் இவர் காட்டிய தீரமும், வேகமும், சாமர்த்தியமும் இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது. முதல் யுத்தம் முடிந்த பல ஆண்டுகள் இவர் ராணுவத்தினரை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தரை வழிப் போரில் இவர் வல்லவராக இருந்ததோடு, அப்படிப்பட்ட போர்  பயிற்சி பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதியிருந்தார். 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி வலுப்பெற்று வளர்ந்து வரும் காலத்தில், ஹிட்லர் ரொமெலுடைய புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாம். அதில் மிகவும் மனதைப் பறிகொடுத்த ஹிட்லருக்கு ரொமெலைத் தனக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது    முதல் உலகப் போரில் பங

புரட்சித் தலைவி அம்மா. அமீரா சிக்கந்தர் பேகம்...

<><><><><><><><><><><><><><> ஆலம்கீர் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்பட்ட மாமன்னர் அவுரங்க ஜேப் (1618 -  1707) அவர்கள் இறந்த பின் அரச குடும்பத்தில் குழப்பங்கள் பரவின. அதிகாரப் போட்டியால் அரச குடும்பம் வலிமையிழந்தது. அவுரங்கஜேபின் விரிந்த ஆளுகைக்குட்பட்ட (நிலப்பரப்பின் மாகாண ஆளுநர்கள், அதிகாரிகள் ஆகியோர் தத்தமது பகுதிகளை தனி அரசாக அறிவித்துக் கொண்டனர். தோஸ்த் முஹம்மது கான் என்ற ராணுவத் தளபதி போபால் பகுதியை தன்னுடைய தனி அரசாக அறிவித்து கொண்டார். கி.பி 1722 (ஹிஜ்ரி 1145) ஆம் ஆண்டில் அவர் தன் மனைவி பத்ஹ் பீபீ பெயரால் “பத்ஹேகர் என்றொரு கோட்டையைக் கட்டினார். பின்னர் ஹிஜ்ரி 1153-ல் அவர் மரணமடைந்தார். இவரைத் தொடர்ந்து போபால் நாட்டில் பனிரெண்டு அரசர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். கி.பி 1949ஆம் ஆண்டு போபால் நாடு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காலம் வரை. இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். அந்தப் பனிரெண்டு அரசர்களில் நால்வர் பெண்கள். அதாவது சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 33% சதவீத இடஒதுக்க

மத்திய கிழக்கின் யதார்த்த நிலை இதுதான்!

மத்திய கிழக்கின் யதார்த்த நிலை இதுதான்! நவ சிலுவைப் போரை வழிநடத்தும் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவனான விளாட்மிர் புடின் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது சிரிய பயணத்தின் போது டமாஸ்கஸில் உள்ள சலாஹுதீன் அல்-அய்யூபியின்(ரஹ்) கல்லறைக்கு சென்றுள்ளான். இது 100 ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லறைக்குச் சென்ற பிரான்ஸ் தளபதி ஒருவனின் செயலை நினைவூட்டுகிறது. அவன் "ஓ சலாஹுதீனே! நாம் மீண்டும் வந்துவிட்டோம்! நாங்கள் சிலுவைப்போர் சந்ததியினர்! உங்கள் சந்ததியினர் எங்கே?" என்று கர்ஜித்தான். முஸ்லிம் உலகை கட்டுப்படுத்துவதிலும் சுரண்டுவதிலும் அழிப்பதிலும் அமெரிக்க ரஷ்ய அணிகள் தமக்குள் முரண்பட்ட நிலையிலும் ஒன்று படுகின்றனர். இவர்களுக்கு உதவியாக.... அப்துல்லாஹ் இப்னு சபா முஸ்தபா கமால் அத்தாதுர்க் அப்துல் அசீஸ் பின் சவுத் என்ற மூவரின் சந்ததிகளும் அவர்கள் சார்ந்த இனக்குழுக்களும் இந்த நவீன சிலுவை போரில் துணைபோகின்றனர். இவர்களில் ஒரு தரப்பு இஸ்லாமிய பெயர் தாங்கி குடியரசு கோட்பாட்டையும்.... இன்னொரு தரப்பு இஸ்லாமிய பெயர் தாங்கி மன்னரிசத்தையும்.... அடுத்த தரப்பு முற்றிலும் மேற்குலகு சார்ந்த செக்கியூலரிசத்த

யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்கள்...

யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலாவதாக நிகழவிருப்பது... 1) எனது மரணம் (நபி ஸல்) 2) பைத்துல் மக்திஸை (முஸ்லிம்கள்) கைப்பற்றுவது. 3) உங்களிலும், உங்கள் சந்ததிகளிலும் (ஏராளமானோரை) உயிர்த்தியாகிகளாக மரணிக்கச் செய்யும் ஒரு (மாபெரும்) கொள்ளை நோய். 4) அதன் பிறகு ஒரு மனிதருக்கு நூறு தீனார் (தங்கக் காசுகள்) கொடுக்கப்பட்டால், அதையே அவர் அற்பமாகக் கருதும் அளவுக்கு உங்கள் மத்தியில் செல்வம் பெருகி விடும். 5) அதையடுத்து ஒரு முஸ்லிமின் வீட்டைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு உங்களை இன்னல்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கும். 6)அதையடுத்து உங்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையில் ஒரு சமாதான உடன்படிக்கை உண்டாகும். பிறகு அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். என்பது கொடிகளுக்குக் கீழ் அவர்கள் அணிவகுத்து உங்களுக்கெதிராகப் போர் தொடுப்பார்கள். அதில் ஒவ்வொரு கொடியின் கீழும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.” என்று நபி (ஸல்) கூறினார்கள். - இப்னுமாஜா 4042 “(ஒரு காலத்தில் அரபுகளாகிய) நீங்களும் “பனூ அஸ்ஃபர்” எனும் வெள்ளையர்க