இந்திய சுதந்திர போராட்டமும் உலமாக்களும்...
இஸ்லாமிய கல்வி என்பது வெறும் தொழுகை, ஓதுதல், சட்ட திட்டங்களை வகுத்தல் என்பதோடு இன்று முடிந்துவிட்டது, ஆனால் அது கடந்த காலங்களில் செய்த அசாத்திய புரட்சி பற்றி பெரும்பாலானோருக்கு எந்த சிந்தனையுமில்லை. இன்று உலமாக்கள் என்றால் சமூகத்தில் இஸ்லாமிய சட்ட மற்றும் மார்க்க ஆலோசகர் என்ற அளவில் அவர்களை பற்றிய பார்வை சுருங்கிவிட்டது, இது எதேச்சையாக நடந்ததா இல்லை சிறுவட்டத்திற்குள் உலமாக்கள் தங்களை தாங்களே அடைத்துக் கொண்டார்களா? அது பெரும் விவாதம். நாம் அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். மதரஸாக்கள் ஆற்றிய சமூக அரசியல், தியாகம் இவை தலைமுறைகளை சென்றடையவேண்டும்.. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் பெரும் நெருக்கடி கொடுத்து வந்தவர்கள் முஸ்லிம் உலமா பெருமக்கள்,. அவர்களின் ஊடாக சமூகத்தில் பரவிவந்த சுதந்திர வேட்கையை எதிர்கொள்ள முடியாமல் அவர்களையும், அவர்களின் ஆன்ம பலமாக விளங்கிய திருக்குர்ஆனையும் பிரித்தானிய அரசு அழிக்க நினைத்தது.. 1861 ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு ஒரு ராணுவ ஆணை பிறப்பிக்கிறது, அது 3,00,000 திருக்குர் ஆன் பிரதிகளை எரிக்க வேண்டும்.. உலமாக