சிறு சிந்தனைகள் தொகுப்பு - 8
1) மனோஇச்சை எனும் சிந்தனையை ஜனநாயக குப்பைக்குள் ஒழித்து வைத்து!!! சுதந்திரம் எனும் அடிமைத்தனத்தை பிரகடனம் செய்து அநீதியை அங்கீகராத்தோடு செய்வதுதான் அரசு என்றாகிவிட்டது. இஸ்லாத்தின் பார்வையில் அரசு என்பதே மக்கள் நலன் பேணுவதுதான்!!!
2) அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும், அவனது வேதத்தையும், அவனது தூதரையும் ஏற்றுக் கொள்ளாத நிராகரிப்பாளனுக்கு ஆதரவு தெரிவித்து என்னை ஆட்சி செய்ய உனக்கு அதிகாரத்தை தருகிறேன் என்ற அர்த்தத்தில் ஓட்டு போடுவது சரியா???
இது இஸ்லாத்தின் வழிமுறையா?
கொஞ்சம் சிந்தியுங்கள்!!!
3) குப்பாருக்கு கும்பிடு போட்டு ஆட்சி அமைத்து அமைதி மார்க்கம் இஸ்லாத்தை மேலோங்க செய்யப் போகிறார்களாம்!!!
லாத், உஜ்ஜா, மனாத் ஆகியவற்றை வணங்கினால் எப்படி இஸ்லாம் மேலோங்கும் சிந்தியுங்கள்!!!
4) மனிதனை மனிதன் தேர்தலில் ஒட்டு போட்டு தேர்வு செய்து தனக்கான சட்டங்களை சட்டமன்றம், பாராளுமன்றம் மூலம் தேர்வு செய்வது என்பது திட்டமான இணைவைப்பே!!!
மனிதகுலத்தின் வாழ்வொழுங்கை வடிவமைப்பவன் இறைவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்!!!
#இஸ்லாமிய_வாழ்வியல்
Comments
Post a Comment