எதிரிகளிடம் ஒரு ஒற்றுமை தெரிவதை கவனிக்கின்றோமா நாம்?

எதிரிகளிடம் ஒரு ஒற்றுமை தெரிவதை கவனிக்கின்றோமா நாம் ?

எம்மிலுள்ள அதீத இஸ்லாமிய சிந்தனை பெற்றுள்ள , அல்லது உலகின் துருப்புப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை தனித்திட்டப்படி கொல்கின்றார்கள். அதன் வாயிலாக ஒரு இஸ்லாமிய மைய்ய அரசு உருவாவதை நேரடியாக தடுக்கின்றார்கள்.

அவ்வாறு இயலாத  நாடு்களில் குறைந்த பட்சமாக நல்லோரை கைது செய்து முடக்குகிறார்கள்.

அரசியல் ஞானமே இல்லாதோரை முன்மாதிரி முஸ்லிம் என்கிற பெயரைச் சூட்டி ஊருக்குள் அவர்களின் கோண(ல் தன)த்தை  மார்கெட்டிங் செய்கிறார்கள்.

புத்தி ஜீவிகளை குருட்டாம் போக்கில் எதிர்க்கும் ஒவ்வொரு முட்டாளுக்கும் களம் அமைத்துத்தந்து எதிர்ப்பை  வலுப்படுத்தி குளிர் காய்கிறார்கள்.

செக்யூலரிச முதலாளித்துவத்துக்கு  வழி விடாத மன்னரிசத்தையோ , கம்யூனிச அரசையோ சகிக்க முடியாத மேற்குலகு , அதே அரசுகள் இஸ்லாத்தை எதிர்க்கும் பட்சத்தில் பொருந்தாக் கூட்டணி அமைத்து லாவணி பாட தவறுவதில்லை.

பிராந்திய இஸ்லாமிய எதிரிகளுக்கு சர்வதேச தரத்து உதவிகளை தந்து உக்கிரமாக மோதும் சந்தர்ப்பதை வலிந்து உண்டாக்குகிறார்கள். பொதுபல சேனா , ஆர்.எஸ்.எஸ் , புத்த மத பயங்கரவாதிகள் , வெள்ளையின வெறியர்கள் , கிருஸ்துவ சிலுவைப்.போராளிகள்  என பெரும் கூட்டத்தையே இப்படி கொல்லைப் புறத்தில் நீண்ட காலமாக மேய்த்து வருகிறார்கள். 

ஆக அவரவருக்கான பாத்திரத்தில் பாங்காக பெர்ஃபாமென்ஸ் பண்ணி வருகிறார்கள் தீனை அழிக்க நினைக்கும் தாகூத்கள

ஆனால்  உப்புச் சப்பில்லாத விவகாரங்களில் மொத்த ஆற்றலையும் தொலைத்துவிட்டு மஹ்தீயும் ,ஈஸாவும் மந்திரவாதிகள் போல் வந்திறங்கி மலக்குமார்களின் உதவியோடு குஃப்ரை ஃபூஊ என ஊதித் தள்ளுவர் என மனப்பால் குடிக்கிறார்கள் நம்மவர்கள்.

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!