சமூக அநீதிகளுக்காக எழுந்து நிற்க்கும் போது!!!
சமூக அநீதிகளுக்காக எழுந்து நிற்கும் போது...!
சமூக அநீதிகள் மிகைத்திருந்த சமூகத்தில் அந்த அநீதிகளுக்கு எதிராக எழுந்து நிற்கும் அரசியலைத்தான் நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் செய்தார்கள்.
அசத்தியத்தினது சிரசை உடைத்து அராஜகத்தை அரங்கேற்றிய தாகூதுகளை எதிர்கொண்டு மனித சமூகத்தில் நீதியை நிலைநாட்டிடும் அரும்பணிதான் நபிமார்கள் இத்தரணியில் செய்த உத்தம பணி.
இன்றுள்ள சமூக அநீதிகளது தோற்றுவாய் முதலாளித்துவ ஜனநாயக அரசிலாகும். இந்த அரசியல் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அநீதியையே ஏற்படுத்திவருகிறது. இன்றுள்ள உலகஒழுங்கை தலைமை தாங்கும் மிகப்பெரிய தாகூது அமெரிக்கா
இதற்கு சிறந்த உதாரணம். இந்த தாகூதுகளை எதிர்கொண்டு மக்களுக்கான நீதியை பெற்றிட ரப்புடைய உலக ஒழுங்கை மீண்டும் இப்பூமியல் நிறுவிட உழைக்கும் எமது சகோதர முஸ்லிம்கள் உலகெங்கும் இன்றுள்ள தாகூதுகளினால் சொல்லொன்னா துன்பங்களையும் துயரங்களையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்டுவருகிறார்கள்.
இந்நிலையில் இன்றுள்ள தாகூதுகளினது முதலாளித்துவ அரசியலில் உள்ள ஊழல் மோசடிகள் களையப்பட வேண்டும் என்று இதே தாகூதிய அரசியலூடாக மாற்றம் காண நினைத்த மகனுக்கு இன்றுள்ள அரசியல் தாகூதுகளது பழிவாங்களை ஒருகனம் சீர்தூக்கிப்பார்கும் தருணம் இது.
உண்மையான அரசியல் மாற்றம் என்பது ரப்புடைய வாழ்வொழுங்கு நிலைநாட்டப்பட குப்ரிய அநீதிக்கு எதிராக எழுந்து நிற்கும் அரசியல் போராட்டமாகும். இந்த அரசியல் போராட்டம் இன்றுள்ள தாகூதிய அரசியல்வாதிகளுக்கு எத்தகைய சவாலாக அமையும் என்பதனை ஒரு கணம் எண்ணிடும் தருணமாக இதனை பாருங்கள்.
- Abu Maryam Mohideen
Comments
Post a Comment