சிறையில் அடைக்கப்படும் முஸ்லிம் பெண்மணிகள்!!!






முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஒரு உய்கூர் முஸ்லிம் பெண்மணி சொல்கிறார், எங்களுக்கு பாடம் எடுப்பார்கள். அப்படி எடுக்கும் போது உய்கூர் பெண்கள் வரலாற்றில் எப்போதும் உள்ளாடை அணிந்ததில்லை. ஒவ்வொருவரும் எக்கச்சக்க ஆண்களுடம் சுகம் அனுபவிப்பவர்களாக் இருந்தனர் என்று சொல்லிக்கொடுப்பார்கள். 

அப்போது கத்தி எங்கள் இதயங்களில் குத்துவது போல் இருக்கும். இன்னும் அவர்கள் சொல்லிக்கொடுத்த இந்த கதை ஆறாத வடுவாக இருக்கிறது.
முகாமில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் நிலை
ஆண்களுக்கு மட்டுமல்ல இந்த முகாம். இந்த முகாம்களில் பால் தரும் தாய்மார்கள் தொடங்கி 80 வயது முதியவர்கள் வரை அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 

முகாம்களுக்குள் எல்லா பகுதியிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். கழிவறைகள் கூட விதிவிலக்கல்ல அங்கும் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். முகாமில் இருக்கும் பெண்கள் உள்ளாடை அணியக்கூடாது. முகாமில் அடைக்கப்பட்டவுடன் பெண்கள் முடியை மழித்து மொட்டையடிக்கப்படுவார்கள். 

இதற்கு சொல்லப்படும் காரணம் தான் கொடுமையானது, முடியை முழுதாக மழித்தால் தான் மாடர்ன் ஹேர்ஸ்டைல் வரும் என்று இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

" சீன அதிபர் ஜிங்பிங் நல்லவர்! கம்யூனிஸ் கட்சி பெரிய கட்சி! இரண்டையும் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான் எனக்கு இந்த தண்டனை" என்று முழக்கமிட வேண்டும். முஸ்லிம்களின் தவ்ஹீத் கொள்கை முழக்கம் என்று சொல்லக்கூடிய " அல்லாஹ்வைத் தவிர கடவுள் இல்லை" என்பதற்கு பதிலாக "எந்த கடவுளும் இல்லை. 

எனக்கு கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை. என் நம்பிக்கை முழுவதும் கம்யூனிச இயக்கதின் மீது தான்" என்று முழக்கமிட வேண்டும்.
" இதுநாள் வரை நான் குருடியாக இருந்து விட்டேன் அதனால் தான் சீன அதிபரின் மகிமை தெரியவில்லை. 

நான் பெரிய முட்டாள் அதனால் தான் இதுநாள் வரை அதிபருக்கு நன்றி சொல்லாமல் இருந்திருக்கிறேன்" என்ற முழக்கதையும் சொல்ல வேண்டும். இந்த முழக்கங்களெல்லாம் இந்த முகாமுக்குள் தினம் தினம் சொல்லியாக வேண்டும். சொல்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

- Abu Siddiq

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!