சீனா வரையறுத்துள்ள தீவிரவாதம்!!!






சீன அரசு, முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி அவர்களை நம்பிக்கையிலிருந்து வெளியேற்றி கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கலாச்சார போரை தீவிரமாக நடத்தி வருகிறது. 

இதற்கு முதற்கட்டமாக ஜிங்ஜாங் பகுதியில் உள்ள மெஜாரிட்டியான உய்கூர் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் வேலையை செய்து வருகிறது. தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனக் கூறி அந்த முஸ்லிம்களின் இனத்தையே சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறது.

தீவிரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையாக இந்த நடைமுறை உள்ளது என்றும் உலக நாடுகளிடம் அறிக்கை விடுகிறது. அப்படி உய்கூர் முஸ்லிம்களில் யாரெல்லாம் தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு 75 முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை பட்ட்டியலிட்டு, இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அந்த 75 பழக்க வழக்கங்களில் சில,
1) முனங்கால்களுக்கு மேலே ஆடை அணிவது
2) கால்களை விரித்து வைத்து தொழுவது
3) தொழும் போது நெஞ்சு பகுதிக்கு மேலாக கைகட்டி தொழுவது
4) முடிக்கு மருதாணி தடவிக்கொள்வது
5) நீளமாக தாடி வளர்ப்பது
6) நீளமான உடைகள் உடுத்துவது
7) இஸ்லாமிய பெண்கள் புர்கா உடுத்துவது
8 மசூதிகளுக்கு வெளியே தொழுகை நடத்துவது.
9) காலங்காலமாக என்ன முறை பின்பற்றப்படுகிறதோ அதில் மாற்றம் ஏற்படுத்துவது.
10)புனித யாத்திரிக்கைக்காக மெக்காவுக்கு செல்வது
11) குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களை வைப்பது.

இதுபோன்ற முஸ்லிம்கள் மேற்கொள்ளும் அடிப்படை விஷயங்களை எல்லாம் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவர்களை அழிக்க நினைக்கிறது. சீனாவின் இச்சட்டம் சர்வதேச அளவில் மட்டும் செயல்படுத்தப்பட்டால் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களில் முக்கால்வாசியினர் சிறையில் தான் இருக்க வேண்டும்.

- Abu siddiq

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!